வறுத்தெடுக்கும் வெயிலுக்கு 60 வயது முதியவர் பலி
சென்னை:
சென்னையில் கடும் வெயிலுக்கு 60 வயது முதியவர் பலியாகியுள்ளார். நாளுக்கு நாள் வெயிலின்கொடுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாகசென்னையில் வெயில் வறுத்தெடுக்கிறது. தினசரி 100 டிகிரிக்கு மேல்தான் வெயில் உள்ளது.
இதனால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே உள்ளது.மாலையில் கடற்கரைகளில் கூட்டம் அலை மோதுகிறது.
கொளுத்தும் வெயிலுக்கு அம்பத்தூர் பகுதியில் மாரிமுத்து என்ற 60 வயது முதியவர்பலியாகியுள்ளார். தன் மகள் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது சுட்டெரிக்கும் வெயில்கொடுமையைத் தாங்க முடியாமல் தலை சுற்றி சுருண்டு விழுந்து இறந்தார்.
"அக்னி நட்சத்திரம்" அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. அதற்கு முன்பே இப்படி வெயில்கொளுத்துவதால் மே மாதத்தில் இன்னும் உக்கிரமாக வெயில் இருக்கும் என்று சென்னை மக்கள்பயத்தில் ஆழ்ந்துள்ளனர்.
-->