For Daily Alerts
Just In
தேனி அருகே லாரி மோதி 2 ராணுவ வீரர்கள் பலி
தேனி:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே நடந்த சாலை விபத்தில் 2 ராணுவ வீரர்கள் பலியாயினர்.
சின்னமனூரைச் சேர்ந்த உதயகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகிய இருவரும் ராணுவத்தில்பணியாற்றி வந்தனர்.
விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த இருவரும் சின்னமனூரிலிருந்து பைக்கில் சென்றுகொண்டிருந்தனர்.
சீலையம்பட்டி அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது எதிரோ வந்த லாரி அவர்களுடையபைக்கில் மோதியது.
இவ்விபத்தில் உதயகுமாரும் முத்துக்குமாரும் தூக்கி எறியப்பட்டு துடிதுடித்து உயிரிழந்தனர்.
விபத்து குறித்து சீலையம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
Story first published: Monday, April 7, 2003, 5:30 [IST]