சாராயம் என நினைத்து "ஆசிட்" குடித்த 2 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சாராயம் என நினைத்து குப்பைத் தொட்டி அருகே கிடந்த பாட்டிலை எடுத்து அதில் இருந்தஅமிலத்தைக் குடித்த 2 பேர் குடல் எரிந்து இறந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ளது முத்தன்னன் கோட்டை கிராமம். இந்தக்கிராமத்தைச் சேர்ந்த 2 பேர் குடிபோதையில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
வழியில் குப்பைத் தொட்டி அருகே ஒரு அமில பாட்டில் கிடந்தது. அதில் அமிலமும் இருந்தது. அதைசாராய பாட்டில் என நினைத்த இருவரும் அதை எடுத்து ஆளுக்குப் பாதியாக குடித்தனர்.
குடித்தவுடன் வயிறு எரிந்து இருவரும் சுருண்டு விழுந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தில்இருந்தோர் அவர்களை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்துவருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications