148 உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதிலும் காலியாக உள்ள 148 உள்ளாட்சிப் பதவிகளுக்கு இன்று இடைத் தேர்தல்நடந்தது.
தமிழகத்தில் பேரூராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர்பதவிகளுக்கான 148 காலியிடங்களுக்கு இன்று இடைத் தேர்தல் நடக்கிறது.
காலை 7.30 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5.30 மணி வரை நடந்தது.
பெரம்பலூரில் பேரூராட்சித் தலைவர் தேர்தலையொட்டி கடும் பதற்றம் நிலவியதால் அங்கு பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நாளை வாக்குகள் எண்ணப்பட்டு மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்.
-->












Click it and Unblock the Notifications