கோவை மாநகராட்சி வாயிலில் மொட்டையடித்துக் கொண்ட கவுன்சிலர்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாநகராட்சி வாசலில் அமர்ந்து மொட்டையடித்து நூதனப் போராட்டம் நடத்தியசுயேச்சை கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சியின் கூட்டம் இன்று வழக்கம்போல் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட சுயேச்சை கவுன்சிலர் அருணாச்சலம் என்பவர் தனது வார்டு தொடர்ந்துபுறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
தனது வார்டில் நலப்பணிகள் எதுவும் நடைபெறுவதில்லை என்றும் மேயர் இதை சரியானமுறையில் கவனிப்பதில்லை என்றும் புகார் கூறினார்.
பின்னர் மேயர் மலரவன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு அருகே நின்று கொண்டுஅவர்களுக்கு எதிராக கோஷம் போட்டார். உடனே அவரை அவையிலிருந்து வெளியேற்றுமாறுகாவல் துறையினரை மலரவன் கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து வெளியேற்றப்பட்ட அருணாச்சலம், மாநகராட்சி அலுவலக வாசலிலேயேஅமர்ந்து தன் தலையை மொட்டையடித்துக் கொண்டார்.
பின்னர் மொட்டைத் தலையுடனேயே அவைக்குள் வந்து மேயரை முற்றுகையிட்டுப் போராட்டம்நடத்தினார். இதையடுத்து அவரைப் போலீசார் கைது செய்தனர்.
சுயேச்சை கவுன்சிலரின் செயலால் மாநகராட்சிக் கூட்டத்தில் பெரும் பதற்றம் நிலவியது.
-->












Click it and Unblock the Notifications