கால்வாயில் மூழ்கி 3 மாணவிகள் பரிதாப சாவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் பக்கிங்காம் கால்வாயில் மூழ்கி 3 மாணவிகள் பரிதாபமாக இறந்தனர்.

சென்னையில் உள்ள பழம்பெரும் கால்வாய்களில் ஒன்று பக்கிங்காம் கால்வாய். ஆக்கிரமிப்புகளால்மூடப்பட்டிருந்த பக்கிங்காம் கால்வாய் தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு,ஆழப்படுத்தப்பட்டு அங்கு தண்ணீர் ஓடிக் கொண்டுள்ளது.

இதில்தான் 3 மாணவிகளும் மூழ்கி இறந்துள்ளனர்.

துரைப்பாக்கம் பகுதியில் உள்ள கண்ணகி நகரைச் சேர்ந்த தனலட்சுமி, கணேஷ் நகரைச் சேர்ந்ததுர்காதேவி, நீலாங்கரையைச் சேர்ந்த திவ்யா ஆகிய 3 பேரும் தோழிகள். மூவருக்கும் 15வயதாகிறது. 8ம் வகுப்பு படித்து வந்தனர்.

தோழிகள் 3 பேரும் மேலும் மூன்று தோழிகளுடன் சேர்ந்து தனலட்சுமி வீட்டுக்குச் சென்றனர். அங்குசிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவரவர் வீட்டுக்குச் செல்ல பஸ் ஸ்டாப்பிற்குக்கிளம்பினர்.

வரும் வழியில் பக்கிங்காம் கால்வாயைக் கடக்க வேண்டும். ஆழம் தெரியாமல் அந்தக் கால்வாயில்ஆறு பேரும் இறங்கினர். அப்போது திவ்யா, தனலட்சுமி, துர்கா ஆகிய 3 பேரும் கால்வாயில் சிக்கிக்கொண்டனர்.

ஆழம் அதிகமாக இருந்ததாலும், சகதி அதிகமாக இருந்ததாலும் அவர்களால் மேலே வரமுடியவில்லை. அப்படியே மூழ்கி விட்டனர்.

இவர்கள் மூழ்குவதைப் பார்த்த மற்ற மாணவிகள் உதவி கேட்டு குரல் எழுப்பினர். அக்கம் பக்கத்தில்இருந்தோர் வந்து மீட்பதற்குள் 3 பேரும் மூச்சுத் திணறி இறந்து விட்டனர்.

3 மாணவிகள் பக்கிங்காம் கால்வாயில் மூழ்கி இறந்த சம்பவம் கண்ணகி நகர் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+