""திமுக மீது புகார் வேண்டாம்"": அதிமுக எம்.எல்.ஏவை கண்டித்த காளிமுத்து
சென்னை:
அரசிடமிருந்து மக்கள் நலன் தொடர்பான பதில்களை கேட்டுப் பெறுவதில்தான் ஆர்வம் காட்டவேண்டுமே தவிர தேவையில்லாத புகார்களைக் கூறிக் கொண்டிருக்கக் கூடாது என்று அதிமுகஎம்.எல்.ஏவான கனகதாராவை சபாநாயகர் காளிமுத்து கண்டித்தார்.
தமிழக சட்டசைபயில் இன்று கேள்வி நேரத்தின் போது அதிமுக உறுப்பினர் கனகதாரா பேசுகையில்முந்தைய திமுக ஆட்சி குறித்து சில புகார்களைக் கூறினார்.
அதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேள்வி நேரத்தின்போது குற்றச்சாட்டுக்களைக்கூறக் கூடாது என்ற விதியை அதிமுக உறுப்பினர் மீறுவதாக திமுக சட்டமன்ற துணைத் தலைவரானதுரைமுருகன் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் காளிமுத்து, மக்கள் நலன் தொடர்பான பதில்களை அரசிடமிருந்துகேட்டுப் பெறுவதற்கே கேள்வி நேரத்தை உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.தேவையில்லாமல் குற்றச்சாட்டுக்களைக் கூறக் கூடாது என்று கண்டிப்புடன் கூறினார்.
கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி திமுகவைத் திட்டுவதை அதிமுகஉறுப்பினர்களும், அதே போல அதிமுகவைத் திட்டுவதை திமுக உறுப்பினர்களும் வழக்கமாகவைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-->