For Daily Alerts
Just In
காங்கோவில் இன கலவரம்: 1,000 பேர் படுகொலை
கிகாலி (ருவாண்டா):
காங்கோ நாட்டில் இன ரீதியிலான வன்முறைகள் தொடர்பாக ஒரே நாளில் 1,000 பேர் படுகொலைசெய்யப்பட்டனர்.
தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோவில் கடந்த 3ம் தேதி இந்த இனப் படுகொலைகள்நடந்துள்ளன.
இட்டுரி பகுதியில் இந்தப் படுகொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைதெரிவித்துள்ளது. கொலையானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்றும்தெரிகிறது.
மிகவும் பின் தங்கிய நாடான காங்கோவில் இது போன்ற இனப் படுகொலைகள் அடிக்கடி நடந்துவருவது வழக்கம். ஆனால் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதுஇதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து இது தொடர்பாக மேலும் விசாரிப்பதற்காக ஐ.நா. குழு ஒன்று காங்கோ நாட்டுக்குவிரைந்துள்ளது.
-->
Comments
Story first published: Tuesday, April 8, 2003, 5:30 [IST]