அமெரிக்காவை கண்டிக்க பா.ஜ.க. அரசு மறுப்பு
பாக்தாத்:
ஈராக் விஷயத்தில் அமெரிக்காவை மத்திய பா.ஜ.க. அரசு ஆதரித்து வருவதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்சனை கிளப்பின. இதனால் ஏற்பட்ட அமளிதுமளியை அடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும்ஒத்தி வைக்கப்பட்டன.
கூட்டம் தொடங்கியதும் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஈராக் பிரச்சனையை எதிர்க் கட்சிகள் கிளப்பின.அமெரிக்காவுக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
ஆனால், இதை சபாநாகர் முரளிமனோகர் ஜோஷி ஏற்கவில்லை. இந்தியாவின் நிலை குறித்து வெளியுறவுத்துறைஅமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிக்கை தாக்கல் செய்வார் என்று அறிவித்தார். ஆனால், இதை எதிர்க் கட்சிகள்ஏற்கவில்லை.
அமெரிக்காவிடம் மத்திய அரசுக்கு அப்படி என்ன பயம் என்று கேட்டார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்எம்.பியான சோம்நாத் சாட்டர்ஜி. இதையடுத்து எதிர்க் கட்சியினருக்கும் பா.ஜ.கவினருக்கும் இடையேவாக்குவாதம் எழுந்தது.
கூச்சல் அதிகரித்ததால் மக்களைவையை சபாநாயகர் ஒத்தி வைத்தார். இதை நிலை தான் மாநிலங்களவையிலும்ஏற்பட்டது.
-->












Click it and Unblock the Notifications