அமெரிக்க படைகளின் ரெளடித்தனம்
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்:
பாக்தாத் நகருக்குள் அதிகாரிகளின் உத்தரவையும் மீறி சில இளம் வீரர்கள் டாங்கிப் படைகளில் அமெரிக்கக்கொடிகளை ஏற்றிக் கொண்டு ரவுடிகள் போல நுழைந்தனர்.
தங்கள் அனுமதியே இல்லாமல் சில வீரர்கள் பாக்தாதுக்குள் சென்றதாக அமெரிக்க போர்த் தலைமையகமானசென்ட்காம் கூறியுள்ளது. இனி இதுபோல செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தனதுவீரர்களை சென்ட்காம் எச்சரித்துள்ளது.
ஈராக்கை சதாம் ஹூசேனிடம் இருந்து விடுவிக்கப் போவதாகக் கூறிக் கொண்டு போர் நடத்தி வரும் அமெரிக்கப்படைகள் ஆக்கிரமிப்பாளர்கள் போல நடந்து கொண்டால் மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பும் என வெள்ளைமாளிகை கருதுகிறது.
இதனால் முடிந்தவரை மக்களை கோபப்படுத்தாமல் செயல்படுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications