இந்தியர்கள் சித்திரவதை: 6 மலேசிய போலீசார் மீது நடவடிக்கை
கோலாலம்பூர்:
கடந்த மாதம் இந்திய சாப்ட்வேர் என்ஜினியர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட இந்தியர்களைச்சித்திரவதை செய்த 6 மலேசியப் போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசியஅரசு தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 9ம் தேதி கோலாலம்பூரின் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில்நுழைந்த போலீசார் அங்கிருந்த இந்தியர்களை மிகவும் கொடுமையாக சித்திரவதை செய்தனர்.
அந்தக் குடியிருப்பில் இருந்த இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் சாப்ட்வேர் என்ஜினியர்கள்,குறிப்பாக ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
உரிய விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் அவர்கள் மலேசியாவில் தங்கியிருந்ததாகக் கூறிமலேசியப் போலீசார் அவர்களை சித்திரவதை செய்துள்ளனர். மேலும் பல சாப்ட்வேர்என்ஜினியர்களை போலீஸ் நிலையத்திற்கும் அழைத்துச் சென்று அவர்களை மண்டிபோட்டுஉட்காருமாறு கூறியும் சித்திரவதை செய்தனர் மலேசிய போலீசார்.
சமீப காலமாக வெளிநாடுகளில் இந்திய சாப்ட்வேர் என்ஜினியர்களுக்கு எதிராகத் தொடர்ந்துகொடுமைகள் இழைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த விவகாரமும் இந்திய சாப்ட்வேர்நிபுணர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து மலேசியா மீது இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது.இந்தச் சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்த மத்திய அரசு, இந்தியாவுக்கு வரவிருந்த ஒருமலேசிய அமைச்சரையும் வரவேண்டாம் என கூறி விட்டது.
பின்னர் சில நாட்கள் கழித்து இந்தச் சம்பவத்திற்கு மலேசிய பிரதமர் அப்துல்லா அகமது படாவிவருத்தம் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக விசாரிக்கவும் மலேசியக் காவல் துறைக்குஉத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையின்போது 6 மலேசியப் போலீசார் வரைமுறைகளை மீறிஇந்தியர்கள் மீது தாக்குதலை நடத்தியது தெரிய வந்தது.
அந்த ஆறு போலீசார் மீதும் விரைவில் தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசியபோலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் நோரியன் மாய் கூறினார். ஆனால் அந்தப் போலீசாரின் பெயர்விவரங்களைத் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.
-->












Click it and Unblock the Notifications