மாப்பிள்ளையை உதறி விட்டு காதலரைக் கைப்பிடித்த பெண்
சென்னை:
பெற்றோர் பார்த்து வைத்த மாப்பிள்ளையை உதறிவிட்டு காதலித்து வந்தவரைக் கைப்பிடித்தார்சென்னையைச் சேர்ந்த இளம்பெண்.
பல்லாவரத்தைச் சேர்ந்தவர் லதா. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரும் காதலித்துவந்தனர். இருவரும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது காதல் தெரியாத லதாவின்குடும்பத்தார் அவர்களது உறவுப் பையன் ஒருவரை லதாவுக்கு நிச்சயம் செய்தனர்.
இதையறிந்த லதா அதிர்ச்சியடைந்தார். காதலனுடன் விவாதித்தார். பின்னர் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினர். குன்றத்தூர் சென்று அங்குள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.
அதன் பிறகு நேராக பல்லாவரம் காவல் நிலையத்திற்கு வந்தனர். அதற்குள் லதாவின் பெற்றோர்மகளைக் காணவில்லை என்று புகார் கொடுத்திருந்தனர்.
லதா தன் காதலரைத் திருமணம் செய்து கொண்டதை கேட்டறிந்த போலீஸார் இரு வீட்டாரையும்காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். அங்கு சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தது.
இறுதியில் இரு வீட்டினரும் திருமணத்தை அங்கீகரிப்பதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்துகாதல் தம்பதிகள் சந்தோஷமாக வீடு திரும்பினர்.
-->












Click it and Unblock the Notifications