தமிழகத்தில் விரைவில் 12,000 புதிய போலீசார் நியமனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் விரைவில் 12,000 போலீசார் நியமிக்கப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறைகளுக்கான மானியக் கோரிக்கைகளை இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்ஜெயலலிதா. அதில்,

தமிழகத்தில் 8,431 ஆண் போலீசார், 2,306 பெண் போலீசார் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். மேலும் 641 ஆண்சப்-இன்ஸ்பெக்டர்களும், 961 பெண் சப்-இன்ஸ்பெக்டர்களும் நியமிக்கப்படுவார்கள்.

இவர்களைத் தேர்வெடுக்கும் பணியில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஈடுபட்டுள்ளது.

சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏராளமானவர்களுடன்காட்டில் சுற்றித் திரிந்த வீரப்பனின் கூட்டம் தற்போது சிதறடிக்கப்பட்டுள்ளது. தற்போது அவன் கும்பலில் ஒருசிலர்தான் உள்ளனர். இதனால் அவன் ஓரிடத்தில் நிலைத்து நிற்க முடியாமல் ஓடிக் கொண்டே இருக்கிறான்.

வீரப்பனைப் பிடிப்பதற்காக இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளோம்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கைஅதிகரித்துள்ளது. இது ஒரு நல்ல அறிகுறியே. ஏனெனில் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை இதன்மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+