For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேனி அருகே முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

By Staff
Google Oneindia Tamil News

தேனி:

தேனி அருகே 1ஆம் மற்றும் 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள் உள்ளிட்டஏராளமான மட்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தின் சுற்றுப் பகுதிகளில் அவ்வப்போது முதுமக்கள் தாழிகள் பூமிக்கு அடியிலிருந்துகண்டெடுக்கப்படுவது வழக்கம்.

அதன்படி தேனி மாவட்டம் நாராயணதேவன்பட்டியில் நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்தபோதுஏராளமான பழங்காலத்தைச் சேர்ந்த மட்பாண்டங்கள் கிடைத்தன.

இந்தத் தகவல் கிடைத்ததும் மதுரை அருங்காட்சியக அதிகாரிகள் நாராயணதேவன்பட்டிக்குவிரைந்தனர். கறுப்பு மற்றும் சிகப்பு நிறங்களில் உள்ள மட்பாண்டங்கள் தவிர சில முதுமக்கள்தாழிகளும் கண்டெடுக்கப்பட்டன.

இந்த முதுமக்கள் தாழிகள் சுமார் 3 மீட்டர் உயரமும் 5 மீட்டர் சுற்றளவும் கொண்டவையாக இருந்தன.வயதானவர்கள் சாகக் கிடக்கும்போது அவர்களை இந்தத் தாழியில் உட்கார வைத்து மூடி மண்ணில்புதைத்து விடுவது அந்தக் கால கிராம மக்களின் வழக்கம்.

இதுபோன்ற இரண்டு தாழிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மதுரை மாவட்டம் திருமங்கலம்அருகே பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்டன என்பது நினைவிருக்கலாம்.

தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள தாழிகள் மற்றும் மட்பாண்டங்கள் அனைத்தும் மதுரைஅருங்காட்சியகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. இவை அனைத்தும் 1ம் மற்றும் 2ம்நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று தெரிய வந்துள்ளது. அந்தக் கால பாண்டிய அரசைச் சேர்ந்தவைஇவை என்றும் கூறப்படுகிறது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X