பாக்தாதில் தற்கொலை தாக்குதல்: அமெரிக்க வீரர் பலி
பாக்தாத்:
பாக்தாத் நகரில் அங்கு நடந்த ஒரு தற்கொலைத் தாக்குதலில் அமெரிக்க வீரர் ஒருவர்கொல்லப்பட்டார்.
பாக்தாதில் இன்னும் பல இடங்களில் ஈராக் ரிபப்ளிகன் படையினருக்கும் அமெரிக்க வீரர்களுக்கும்இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. அப்போது நடந்த ஒரு தற்கொலைத்தாக்குதலில்தான் அமெரிக்க வீரர் ஒருவர் உடல் சிதறி உயிரிந்தார்.
வடக்கு பாக்தாதில் உள்ள சதாம் நகரில் இந்தத் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
சதாம் எங்கே?- மர்மம் நீடிப்பு:
இந்நிலையில் ஈராக் அதிபர் சதாம் ஹூசேன் எங்கே மறைந்துள்ளார் என்று தெரியாமல் அமெரிக்காஇன்னும் குழம்பி வருகிறது.
போரில் அவரும் அவருடைய மகன்களும் கொல்லப்பட்டனரா என்பதையும் இன்னும்அமெரிக்காவால் நிரூபிக்க முடியவில்லை.
இதற்கிடையே சதாமின் சகோதரர் பார்ஸான் இப்ராகிம் ஹசன் அல்-திக்ரிதியின் வீட்டில் இன்றுஅமெரிக்க விமானங்கள் சராமாரியாகக் குண்டுகளை வீசின.
ஈராக் மக்களுக்கு புதிய டி.வி.:
இந்நிலையில் ஈராக் மக்களுக்காக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சும் பிரிட்டிஷ் பிரதமர் டோனிபிளேரும் சேர்ந்து புதிய டி.வி. ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.
"விடுதலையை நோக்கி" என்கிற அர்த்தத்தில் பெயரிடப்பட்டுள்ள இந்த டி.வியின் நிகழ்ச்சிஒளிபரப்பை இருவரும் சேர்ந்து துவக்கி வைத்துள்ளனர்.
ஹெர்குலிஸ் என்ற விமானத்தில் இருந்து பறந்தவாறே இந்த டி.வி. நிலையம் இயங்கி வருகிறது.
இதைத் துவக்கி வைத்து அவர்கள் பேசுகையில், ஈராக் நாட்டை அமெரிக்காவோ, பிரிட்டனோஅல்லது ஐக்கிய நாடுகள் சபையோ ஆளாது. ஈராக் மக்களுக்குத்தான் இந்நாடு சொந்தம். ஈராக்,பிரிட்டிஷ் படைகள் தேவையில்லாமல் ஒரு நாள் கூட இந்நாட்டில் இருக்காது என்றனர்.
-->