For Quick Alerts
For Daily Alerts
Just In
அருப்புக் கோட்டையில் மின்னல் தாக்கி 4 பேர் பலி
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மின்னல் தாக்கியதில் 3 பெண்கள் உள்பட 4 பேர் இறந்தனர்.
அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது.கோடை மழை என்பதால் இடி- மின்னலுடன் கூடிய மழை பெய்கிறது. நேற்று நிலக் கடலையை அறுவடை செய்யவயலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய 3 பெண்கள் மீது மின்னல் தாக்கியது.
இதில் அந்த 3 பேரும் அந்த இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
இதேபோல திருச்சுழி என்ற இடத்தில் முத்துராமலிங்கம் என்பவர் மீதும் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயேஅவரும் உடல் கருகி இறந்தார்.
-->
Comments
Story first published: Saturday, April 12, 2003, 5:30 [IST]