For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென் மாவட்டங்களில் கன மழை: மின்னல் தாக்கி 4 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி:

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாகக் கன மழை பெய்து வருகிறது. இதன்விளைவாக திருநெல்வேலியில் மின்னல் தாக்கி 3 பெண்கள் உள்பட 4 பேர் பலியானார்கள்.

கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்தி வந்தது. இந்நிலையில் கோடையைத்தணிக்கும் வகையில் தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது.

குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. நேற்று விடிய விடியஇம்மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வந்தது. பூதப்பாண்டியில் அதிகஅளவாக 6 மி.மீ. மழை அளவு பதிவாகியது.

குருவிகுளம் என்ற இடத்தில் மின்னல் தாக்கியதில் ஒரு பெண் அந்த இடத்திலேயே உடல் கருகிஉயிரிழந்தார். இருளப்பபுரம் என்ற இடத்தில் மின்னல் தாக்கி 3 வயதுக் குழந்தை உள்பட 2 பேர்படுகாயம் அடைந்தனர்.

இதேபோல் திருநெல்வேலி, விருதுநகர் போன்ற மாவட்டங்களிலும் நன்றாக மழை பெய்துவருகிறது.

திருநெல்வேலி-பஞ்சன்குளம் பகுதியில் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த குருவம்மா,புஷ்பம் ஆகிய இரு பெண்களும் மின்னல் தாக்கி இறந்தனர். அவர்களுடன் வேலை பார்த்துக்கொண்டிருந்த அந்தோணியம்மாள், பொன்னாத்தாள் ஆகியோர் காயமடைந்தனர்.

அதேபோல அய்யப்ப நகர் என்ற இடத்தில் மின்னல் தாக்கியதில் முகம்மது ராஜா என்பவர் இறந்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பல இடங்களில் வாழைத் தோட்டங்கள்கடுமையாகச் சேதமடைந்தன.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X