தீவனம் இல்லாமல் 2 லட்சம் கோழிகள் சாவு
பொள்ளாச்சி:
லாரி ஸ்டிரைக்கால் உரிய தீவனம் கிடைக்காமல் பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம் பகுதிகளில்சுமார் 2 லட்சம் கறிக் கோழிகள் பரிதாபமாக பலியாகியுள்ளன.
தமிழகத்தில் சுமார் 10,000 கறிக் கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 4 லட்சம்கறிக் கோழிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. லாரிகள் மூலம்தான் இவை கேரளாஉள்ளிட்ட பிற மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்நிலையில் லாரி ஸ்டிரைக் காரணமாக கடந்த 3 நாட்களாக கறிக் கோழிகளை விற்பனைக்குஅனுப்ப முடியவில்லை.
இதனால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 11.4 லட்சம் கறிக் கோழிகள் விற்பனைஆகாமல் தேங்கி உள்ளன.
இதையடுத்து பிராய்லர் கறிக் கோழி விற்பனை செய்யும் கடைகளில் கோழிகள் வரத்து இல்லாதகாரணத்தால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது. கிலோவுக்கு ரூ.60ஆக விற்கப்பட்டு வந்த கறிக்கோழியின் விலை ரூ.100ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம் பகுதிகளில் உள்ள கறிக் கோழிப்பண்ணைகளுக்கு லாரிகள் மூலம் வர வேண்டிய தீவனம் வந்து சேராத காரணத்தால், தீவனம் இன்றிசுமார் 2 லட்சம் கறிக் கோழிகள் பலியாகியுள்ளன.
லாரிகள் ஸ்டிரைக் நீடித்தால் இந்த எண்ணிக்கையும் மளமளவென அதிகரிக்கும் என்றுஅஞ்சப்படுகிறது.
-->