பொடா சட்டத்தை உடனே வாபஸ் பெற வாஜ்பாய்க்கு கருணாநிதி அவசர கடிதம்
சென்னை:
பொடா சட்டம் தொடர்ந்து துஷ்பிரயோகமாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதால் அதைத்திரும்பப் பெறுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
"நக்கீரன்" கோபால் மீதான வழக்குகள் பொடா சட்டத்தின் கீழ் மாற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்துபொடா சட்டத்தை வாபஸ் பெறக் கோரி பிரதமர் வாஜ்பாய்க்கு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.அதில்,
பொடா சட்டம் தமிழகத்தில் தவறாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு பொடாசட்டத்தை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வருகிறது.
பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் செயல்பாடுகள் ஒரு புதிய பரிமாணத்தை எட்டி,எல்லைகளை எல்லாம் மீறிப் போய்விட்ட நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
தமிழகத்தில் ஒரு பத்திரிக்கையாளரே பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஆயுதம்ஏந்திய தீவிரவாதிகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதாக அர்த்தப்படுத்தி "நக்கீரன்" கோபால்கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை 42 பேர் பொடாவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 22 பேர்அரசியல் பிரமுகர்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை போன்ற காரணங்களுக்காக பொடா ஏவப்படுகிறது. அதுஇப்போது பத்திரிக்கையாளர்களையும் அச்சுறத்தத் தொடங்கியுள்ளது.
இதனால் பொடா தமிழகத்தில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது. இந்நிலை தொடர்ந்தால் ஜனநாயகம் எங்கே என்று தேட வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.
எனவே பொடா சட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு வழியேஇல்லை. இந்தச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனஅந்தக் கடிதத்தில் கூறியுள்ளார் கருணாநிதி.
-->












Click it and Unblock the Notifications