நாளை காஷ்மீர் செல்கிறார் வாஜ்பாய்
ஸ்ரீநகர்:
பிரதமர் வாஜ்பாய் 2 நாள் பயணமாக நாளை காஷ்மீருக்குச் செல்லும் நிலையில் கார்கில் பகுதியில்பாகிஸ்தான் படையினர் கடும் ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
காஷ்மீர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, புதிய ரயில் பாதை அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்டபல நிகழ்ச்சிகளில் வாஜ்பாய் கலந்து கொள்கிறார்.
மேலும் காஷ்மீரில் நடக்கும் ஒரு பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு அவர் பேசவுள்ளார்.காஷ்மீரில் ஒரு பிரதமர் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வது கடந்த 17 ஆண்டுகளில் இதுதான்முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 17 ஆண்டுகளுக்குமுன் காஷ்மீரில் நடந்த ஒரு பிரம்மாண்டமான பேரணியில் கலந்து கொண்டார்.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் இன்னும் தன் பிடிவாதப் போக்கைக் கைவிடவில்லை. எல்லைப்பகுதி வழியாக காஷ்மீருக்குள் ஏராளமான பாகிஸ்தான் தீவிரவாதிகள் இன்னும் ஊடுருவிக்கொண்டுதான் உள்ளனர்.
ஆனாலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளாத வரைஅந்நாட்டுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்பதை வாஜ்பாய் மீண்டும்மீண்டும் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் நாளை காஷ்மீர் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுஅக்டோபர் மாதம் காஷ்மீரில் நடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் வாஜ்பாய் முதல் முறையாகஅங்கு செல்கிறார்.
காஷ்மீரில் முழு அமைதியைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகவே பிரதமரின்காஷ்மீர் பயணம் அமையக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வாஜ்பாயின் காஷ்மீர் பயணத்தை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த மாதம்தீவிரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்ட 24 ஹிந்துக்களின் குடும்பத்தினர் கடும் அதிருப்தியில்உள்ளனர். "எங்களை அவர் கண்டுகொள்ளவே இல்லை. அவர் வருகையைப் பற்றி எங்களுக்குஅக்கறை இல்லை" என்று குமுறலுடன் அவர்கள் கூறினர்.
இதற்கிடையே வாஜ்பாய் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹூரியத் மாநாட்டுக்கட்சியினர் காஷ்மீரில் இரண்டு நாள் பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
வாஜ்பாய் நாளை காஷ்மீர் வரும் நிலையில் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் படையினர் கடுமையானஷெல் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் அங்குள்ள ஒரு நீர்மின் உற்பத்தி நிலையம் கடுமையாகச்சேதமடைந்து விட்டது.