தமிழக அரசு "டோட்டல் பெயிலியர்": ராமதாஸ்
விழுப்புரம்:
தமிழக அரசு அனைத்து விதத்திலும் தோல்வி அடைந்து விட்டது என பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
அதிமுக அரசு ஆட்சிக்கு வந்து இத்தனை நாட்களாகியும் கூட இன்னும் நிதி நிலைமைசீரடையவில்லை. போகப் போக இன்னும் மோசமாகத்தான் உள்ளது.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சி முற்றிலும் தேக்கமடைந்து விட்டது. இந்த ஆட்சியில் விவசாயிகள்,மாணவர்கள், ஆசிரியர்கள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினரும்போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பத்திரிக்கையாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். வழக்குகளும் சராமாரியாகத் தொடுக்கப்படுகின்றன.
இதுபோன்ற சூழ்நிலையில் அரசியல் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தினால் தவறில்லைஎன்ற கருத்தை நான் கூறினேன். அப்படிப்பட்ட தேவை ஏற்பட்டால் அப்பிரிவைப்பயன்படுத்துவதில் தவறே இல்லை என்றார் ராமதாஸ்.
-->