லாரி உரிமையாளர்கள் - அரசு பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் ஸ்டிரைக்
டெல்லி:
லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியாக அவர்களுடன்மத்திய அரசு இன்ற நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
அடிக்கடி டீசல் விலைகள் உயர்த்தப்படுவதைக் கண்டித்தும், ஒவ்வொரு மாநிலத்திலும்லாரிகளுக்கென தனித்தனியாக சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும் வேறு பலகோரிக்கைகளை வலியுறுத்தியும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்.
லாரிகள் ஸ்டிரைக் 4வது நாளை எட்டியுள்ள நிலையில் மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறைஅமைச்சர் கந்தூரி இன்று காலை லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது லாரி உரிமையாளர்களின் எந்த ஒரு கோரிக்கையையும் ஏற்க கந்தூரி மறுத்து விட்டார்.லாரி உரிமையாளர்களும் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றியே ஆக வேண்டும் எனபிடிவாதமாக இருந்தனர்.
இதையடுத்து இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து தங்கள்கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்று லாரிஉரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இருந்தாலும் லாரி உரிமையாளர்களுடன் தொடர்ந்து பேச்சு நடத்தப்படும் என்று கந்தூரிதெரிவித்துள்ளார். ஆனால் அடுத்தகட்ட (2வது சுற்று) பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும்என்பது குறித்து எதுவும் முடிவு எடுக்கப்படவில்லை.
மேலும் அந்த அந்த மாநில அரசு அதிகாரிகளுடனும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்றும்கந்தூரி கூறினார்.
தொடர்கிறது ஸ்டிரைக்:
பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து லாரி உரிமையாளர்கள் தங்கள்வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்துள்ளனர்.
லாரிகள் ஸ்டிரைக் காரணமாக தமிழகத்தில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்குத் தொடர்ந்துதட்டுப்பாடு நிலவுகிறது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் 75 சதவீத பெட்ரோல் பங்க்குகள் வறண்டுபோய்விட்டன.
பெட்ரோல், டீசலுக்காக இன்றும் ஆயிரக்கணக்கான வாகன உரிமையாளர்கள் அலைமோதிவருகின்றனர். பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டு விட்டன.
மேலும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என்றஅச்சம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஸ்டாக் வைக்கப்பட்டிருந்த காய்கறிகளும் தற்போது அழுகி,கெட்டுப் போக ஆரம்பித்து விட்டன.
இதனால் பொதுமக்களுக்கு காய்கறியே கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் மற்றஅத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
-->