பெரம்பலூர் அருகே பஸ்-வேன் மோதல்: புதுமண தம்பதி உள்பட 11 பேர் பலி
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே பஸ்சும் வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிய விபத்தில் புதுமணத்தம்பதி, 4 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 11 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
தூத்துக்குடியிலிருந்து விழுப்புரம் நோக்கி திருமண கோஷ்டியை ஏற்றிக் கொண்டு ஒரு வேன்சென்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம்தான் திருமணம் செய்து கொண்ட வெங்கடேசன்-பத்மாஉள்பட 20க்கும் மேற்பட்டவர்கள் இந்த வேனில் இருந்தனர்.
பெரம்பலூரை அடுத்த சிறுகனூர் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்த் திசையில்சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் மீது இந்த வேன் நேருக்குநேர் பயங்கரமாக மோதியது.
இதில் வேனின் முன் பகுதி சுக்கு நூறாக நொறுங்கியது. இவ்விபத்தில் வேனில் பயணம் செய்தவெங்கடேசன்-பத்மா தம்பதி, 2 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 8 பேர் அந்த இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த 21 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு 2 பெண்கள்உள்பட 3 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். இவர்களில் ஒருவர் பஸ்சில் வந்தவர். மற்ற 18பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications