மதுரை என்ஜினியரிங் கல்லூரியில் நவீன தகவல் தொடர்பு ஆய்வகம்
மதுரை:
மதுரை தியாகராஜா என்ஜினியரிங் கல்லூரியில் அனைத்து வகையான தகவல் தொடர்புவசதிகளுடன் கூடிய ஒரு நவீன ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஏஜிலெண்ட் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் இந்த ஆய்வகத்தைஅமைத்துள்ளது.
தமிழகத்தில் படிக்கும் என்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்குத் தேவைப்படும் அனைத்துவகையான தகவல்களும் இந்த ஆய்வத்தில் கிடைக்கும் வகையில் இந்த ஆய்வக மையம்செயல்படுகிறது.
"சிக்னல் ஆசில்லாஸ்கோப், லாஜிக் அனலைஸிஸ் சிஸ்டம், மைக்ரோவேவ் நெட்வொர்க்அனலைஸர் உள்ளிட்ட பல கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த செயல்முறைப்பயிற்சியே இல்லாமல் இந்திய மாணவர்கள் தவித்து வந்தனர். இனி அந்தக் கவலையே இல்லை"என்றார் இந்தியாவுக்கான ஏஜிலெண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் கேவல் கண்ணா.
தங்கள் நிறுவனம் தயாரித்து வைத்துள்ள இதுபோன்ற கருவிகளைப் பயன்படுத்தத் தெரிந்துகொள்வதன் மூலம் என்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு படித்து முடித்த பின் வேலை வாய்ப்புநிச்சயம் கிடைக்கும் என்றும் கண்ணா கூறினார்.
-->












Click it and Unblock the Notifications