வீரப்பனுக்கு போன பணம்: ரஜினியையும் விசாரிக்க தமிழக போலீஸ் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கன்னட நடிகர ராஜ்குமாரை மீட்க வீரப்பனுக்குப் பணம் கைமாறியதாகக் கூறப்படுவது குறித்து கருணாநிதி தவிரரஜினிகாந்திடமும் விசாரணை நடத்த முதல்வர் ஜெயலலிதா போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனால் விரைவில் ரஜினியிடமும் விசாரணை நடத்தப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விவகாரத்தில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுவிட்டார். திமுக தலைவர் கருணாநிதியிடமும் விசாரணைநடத்தப்படும் என அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. வீரப்பனுக்கு கைமாறிய பணத்தில் ஒரு பகுதியை கருணாநிதியேவைத்துக் கொண்டதாக ஜெயலலிதா கூறுகிறார்.

இதனால் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசாரைக் கொண்டு கருணாநிதியை விசாரிக்கப் போவதாகக் கூறப்படுகிறது.

ராஜ்குமாரை விடுவிக்க வீரப்பன் கேட்ட பெரும் தொகையைத் திரட்டுவதில் முக்கிய உதவி புரிந்தவர் ரஜினிகாந்த்தான். அவரே ஒரு பெரும் தொகையை இதற்காகக் கொடுத்ததாகவும், தனக்கு நெருக்கமான கன்னட நடிகர்களிடம்இருந்து அவரே முன் நின்று பணம் திரட்டியதாகவும் கூறப்பட்டது.

இதனால் ரஜினியிடமும் விசாரணை நடத்த தமிழக போலீசார் முடிவு செய்துள்ளனர். இவர் தவிர கன்னடநடிகர்களிடமும் விசாரணை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசின் உதவியை நாடவும்தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+