ஜெ. தலையிடலாமே: ராமதாஸ் யோசனை
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு உடனடியாக லாரி ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றுபாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், அகில இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள லாரி உரிமையாளர்கள்வேலை நிறுத்தத்தில் முக்கால்வாசி கோரிக்கைகளை வட மாநிலத்தவர்தான் தீர்க்க வேண்டும். அப்படியிருக்கதமிழக மக்கள் எதற்காக இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்படவேண்டும்?
முதல்வர் ஜெயலலிதா இந்தப் பிரச்சினையில் தலையிட்டு லாரிகள் ஸ்டிரைக்கை வாபஸ் பெற நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகத்தில் மட்டும் லாரிகளை இயக்குவதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த திமுக ஆட்சியில் தேசிய அளவில் லாரி ஸ்டிரைக் நடந்தபோது முதல்வர் கருணாநிதி தலையிட வேண்டும்என்று நீங்கள் (ஜெயலலிதா) அறிக்கை விட்டீர்கள். இப்போது அதே பொறுப்பு உங்களிக்கும் உள்ளது.
லாரி உரிமையாளர்களும் தங்களது சமூகப் பொறுப்பை உணர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றுகூறியுள்ளார் அவர்.
-->












Click it and Unblock the Notifications