சேலம் அருகே பிளஸ் டூ டாக்டர்" கைது

Subscribe to Oneindia Tamil

சேலம்:

வெறும் பிளஸ் டூ மட்டுமே படித்த நபர் ஒருவர் கடந்த 13 வருடமாக போலி டாக்டராக செயல்பட்டு மருந்து,மாத்திரை கொடுத்து வந்துள்ளார். சமீபத்தில் அவர் கொடுத் தவறான சிகிச்சை காரணமாக ஒருவர் தனது கால்பெருவிரலையே இழந்துள்ளார்.

இதையடுத்து அந்த போலி டாக்டரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சேலம் அருகே நமச்சிவாயம் என்பவர் கிளினிக் வைத்து நடத்தி வந்தார். கடந்த 13 வருடமாக அவர் ஆங்கிலமருத்துவம் பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் ரங்கசாமி என்பவர் காலில் ஏற்பட்ட தீக்காயத்துக்காகநச்சிவாயத்திடம் சென்றார்.

அவரும் ஊசியைப் போட்டு ஏதோ மாத்திரைகளையும் மருந்துகளையும் கொடுத்துள்ளார். அந்த மருந்துகளைபூசிய பின்னரும் விரலில் தீக் காயம் ஆறவில்லை. வலி தான் அதிகரித்தது.

இதையடுத்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கும் தவறான மருந்துகொடுக்கப்பட்டதால் கால் பெருவிரலில் சீழ் பிடித்தது. இத்ை தொடர்ந்து அவரது உயிரைக் காப்பாற்ற விரல்வெட்டி எடுக்கப்பட்டது.

அவருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் முன்பு இவர் எடுத்த சிகிச்சைகள் குறித்து ஆராய்ந்தனர். அப்போதுநமச்சிவாயம் கொடுத்த மருந்துகள் தான் விரல் சீழ் பிடிக்கவே காரணமாக இருந்ததை அறிந்தனர்.

உடனே இது குறித்து போலீசில் புகார் தருமாறு ரங்கசாமிக்கு அறிவுறுத்தினர். அவரும் போலீசில் புகார் தந்தார்.இதையடுத்து போலீஸார் டாக்டர் நமச்சிவாயத்திடம் விசாரணை நடத்தினர்.

அப்போது தான் அவர் டாக்டரே இல்லை என்பது தெரியவந்தது. வெறும் பிளஸ் டூ மட்டுமே படித்த இவர் பின்னர்ஒருவரிடம் ஆயுர்வேத சிகிச்சை பயிற்சியை அரைகுறையாக முடித்தார். இதன் பின்னர் ஆங்கில மருத்துவம் பார்க்கஆரம்பித்துவிட்டார். கிட்டத்தட்ட 13 வருடங்களாக அவர் டாக்டராக செயல்பட்டு வந்துள்ளார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+