கோவை குண்டு வெடிப்பு கைதி மதானிக்கு திடீர் நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பில் முக்கியக் குற்றவாளியான கேரள மக்கள் கட்சித் தலைவர்அப்துல் நாசர் மதானிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த 1998ல் கோயம்புத்தூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் சுமார் 60 பேர்கொல்லப்பட்டனர்.
தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக மதானி, அல்-உம்மா பாஷா உள்ளிட்ட 168 பேர் கைதுசெய்யப்பட்டு கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிறையில் இருந்த மதானி இன்று காலை திடீரென மயக்கமடைந்தார். மேலும் லேசானநெஞ்சு வலியாலும் அவர் அவதிப்பபட்டார்.
இதையடுத்து சிறை டாக்டர்கள் அவரைப் பரிசோதித்து மருத்துவமனையில் சேர்க்கபரிந்துரைத்தனர். இதைத் தொடர்ந்து கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் மதானிசேர்க்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மதானி தற்போது நலமுடன் உள்ளதாகமருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
-->