ஊட்டி மலை ரயில் தடம் புரண்டது: சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி

Subscribe to Oneindia Tamil

மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்குச் சென்று கொண்டிருந்த மலை ரயில் இன்று காலை தடம்புரண்டது. இதனால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் சுற்றுலாப் பயணிகள் கடும்அதிருப்தி அடைந்தனர்.

தினமும் காலை 7 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து மலை ரயில் ஊட்டிக்குக் கிளம்பிச் செல்லும்.

ஆனால் ரயில் ஓடுவதற்குத் தேவையான நிலக்கரியை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டதால் இன்றுஇந்த ரயில் 8 மணிக்குத்தான் கிளம்பியது.

ஒரு மணி நேரம் தாமதமானாலும் கூட பரவாயில்லை என்று மலை ரயிலில் சென்ற பயணிகள்உற்சாகத்துடன் இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டே சென்றனர்.

இந்நிலையில் கல்லல் என்ற ரயில் நிலையத்திற்கு அருகே சென்று கொண்டிருக்கும்போது மலைரயிலின் 2வது பெட்டி திடீரென்று தடம் புரண்டது. இதையடுத்து மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.

இதனால் சுற்றுலாப் பயணிகள் மிகவும் அதிருப்தி அடைந்தனர். ரயில்வேத் துறையின் கடும்அஜாக்கிரதை காரணமாகவே மலை ரயில் பாதையில் அடிக்கடி ஏதாவது பிரச்சனை வந்து கொண்டேஉள்ளது என அவர்கள் குற்றம் சாட்டினர்.

சுமார் 3 மணி நேரத்திற்குப் பின்னர் அவர்கள் வேன் மற்றும் கார்கள் மூலம் ஊட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதற்கிடையே ரயில் தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. விரைவில்மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊட்டி மலைப் பாதையில் ரயில் தடம் புரண்டிருப்பது இதுதான் முதல் முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+