For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜாதி வெறியை தூண்டும் டாக்டர்கள்: ராமதாஸ், கிருஷ்ணசாமி மீது ஜெ. கடும் தாக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசும், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமியும் தமிழகத்தில் ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு வருவதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.

ஆதி திராவிடர் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது குறித்து சட்டசபையில் இன்று விவாதம் நடந்தது. அதில்பார்வர்ட் பிளாக் கட்சியின் உறுப்பினரான சந்தானம் பேசுகையில், மக்களிடையே கல்வியைப் பரப்பினால் ஜாதிவெறி ஒழிந்துவிடும். இதனால் மக்களிடையே கல்வியைப் பரப்ப அரசு முயல வேண்டும் என்றார்.

இதற்குப் பதிலளித்த ஜெயலலிதா, கல்வி கற்றுவிட்டால் மட்டும் ஜாதி வெறி அடங்கிவிடாது. இதற்கு உதாரணம்ராமதாசும் கிருஷ்ணசாமியும். இருவரும் எம்.பி.பி.எஸ். அளவுக்குப் படித்த டாக்டர்கள் தான், ஆனாலும் அவர்கள்தான் தமிழகத்தில் ஜாதி வெறியைப் பரப்பி வருகின்றனர் என்றார்.

உடனே எழுந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, டாக்டர் ராமதாசுக்கு ஜாதி உணர்வு தான்உள்ளதே தவிர வெறி இல்லை என்றார்.

இதற்கு பதிலளித்த ஜெயலலிதா இரண்டும் ஒன்று தான். இதில் என்ன வித்தியாசம் இருக்க முடியும் என்றார்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X