சேலம் அரசு மருத்துவமனை முன் நோயாளி தீக்குளிப்பு
சேலம்:
சேலம் அரசு மருத்தவமனை முன்பாக நோயாளி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் தங்கி ஒரு நோயாளி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவர் திடீரென்று மருத்துவமனையில் வாசலுக்கு விரைந்து வந்து, தன் உடம்பில்கெரசினை ஊற்றித் தீ வைத்துக் கொண்டார்.
மளமளவென்று ஒரு சில நிமிடங்களில் நடைபெற்ற இந்தச் செயலால் அங்கு நின்றுகொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால் சிலர் மட்டும் சுதாரித்துக் கொண்டு விரைந்து சென்று தீயை அணைத்து அந்தநோயாளியைக் காப்பாற்றி மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்குத் தற்போது தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளை டாக்டர்கள் சரியாகவே கவனிப்பதில்லை என்ற புகார்எப்போதுமே உண்டு. அதிலும் சேலம் அரசு மருத்துவமனையில் இந்தப் புகார் குறித்து கேட்கவேவேண்டாம்.
கடந்த சில மாதங்களுக்கு முன் அரசு டாக்டர்களின் அலட்சியத்தால் தவறான சிகிச்சை செய்யப்பட்ட2 வயது ஆண் குழந்தை ஒன்று முதலில் கையை இழந்து, பின்னர் உயிரையே இழந்ததுநினைவிருக்கலாம்.
இந்நிலையில் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அரசு மருத்துவமனை முன்பாகநோயாளி தீக்குளித்திருப்பது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-->












Click it and Unblock the Notifications