சார்ஸ் நோயால் 13 வயது சிறுவன் சாவு?- ராஞ்சியில் பீதி

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் சார்ஸ் நோயால் இறந்து விட்டதாக செய்திகள்வெளியானதைத் தொடர்ந்து அங்கு பெரும் பீதி கிளம்பியுள்ளது.

காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், கால் வலி ஆகியவற்றால் அவதிப்பட்ட முகமது பர்வேஸ் என்றஅந்தச் சிறுவன் கடந்த 17ம் தேதி இரவு ராஞ்சி அருகே உள்ள ஒரு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டான்.

இந்நிலையில் நேற்று மாலை முகமது திடீரென இறந்து விட்டான். அவன் சார்ஸ் நோயால்தாக்கப்பட்டுதான் இறந்தான் என்று உள்ளூர் செய்தித் தாள் ஒன்றில் செய்தி வெளியானதைத்தொடர்ந்து ராஞ்சி மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது.

ஆனால் அவன் சார்ஸ் நோய் தாக்குதலால் இறக்கவில்லை என்று அம்மருத்துவமனை அறிக்கைவெளியிட்டுள்ளது. சார்ஸ் நோய்க்கான எந்தவிதமான அறிகுறியும் அவன் உடலில் இல்லை என்றும்மருத்தவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.

"அந்தச் சிறுவனுக்கு சார்ஸ் நோய் வருவதற்கான வாய்ப்பே இல்லை. அவன் வெளிநாட்டிற்கோ,வெளியூருக்கோ எங்கும் சென்று வரவில்லை. இங்கேயேதான் இருந்துள்ளான். அப்படிஇருக்கையில் அவனுக்கு எப்படி சார்ஸ் நோய் வரும்?" என்று டாக்டர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

முகமது சார்ஸ் நோயால் இறக்கவில்லை என்பதை டாக்டர்கள் உறுதி செய்துள்ள போதிலும் அங்குதொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+