லாரி உரிமையாளர்கள் - தமிழக அரசு பேச்சு தோல்வி
சென்னை:
லாரி உரிமையாளர்களுடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவிதமான உடன்பாடும்எட்டப்படவில்லை.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக அம்மாநிலத்தில் லாரிஉரிமையாளர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு விட்டனர்.
இதேபோல் தமிழக அரசும் லாரி உரிமையாளர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. தமிழகஅரசின் போக்குவரத்துத் துறை கமிஷனர் பழனியப்பனுடன் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது.
சென்னை நகருக்குள் லாரிகள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட பல்வேறுபிரச்சனைகள் குறித்து பழனியப்பனிடம் லாரி உரிமையாளர்கள் புகார் கூறினர்.
தமிழகம் முழுவதிலும் உள்ள செக் போஸ்ட்களில் அதிகாரிகளை நியமித்து "ஓவர் லோடு" ஏற்றும்பிரச்சனையைத் தீர்த்து வைப்பதாக அப்போது பழனியப்பன் உறுதி அளித்தார்.
மேலும் சென்னைக்குள் லாரிகள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது குறித்து தலைமைச்செயலாளர் லட்சுமி பிரானேஷுடன் ஆலோசித்து விரைவில் முடிவு எடுப்பதாகவும் பழனியப்பன்கூறினார்.
ஆனாலும் அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் எடுக்கும் முடிவைப்பொறுத்தே தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்வது குறித்து அறிவிப்போம் என லாரிஉரிமையாளர்கள் கூறி விட்டனர்.
இதனால் தமிழக அரசுக்கும் லாரி உரிமையாளர்களுக்கும் இடையே எந்தவிதமான உடன்பாடும்இந்தப் பேச்சுவார்த்தையின்போது எட்டப்படவில்லை. எனவே லாரிகள் வேலைநிறுத்தம்தமிழகத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.
-->