வேலூர் அருகே மற்றொரு பயங்கரம்: தாய்-மகனைக் கொன்று நகைகள் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

வேலூர் அருகே உள்ள காட்பாடியில் வங்கி ஊழியரின் மனைவி, மகனைக் கொன்று தங்கநகைகளைக் கொள்ளையடித்துச் சென்றவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூரில் நகைக் கடை அதிபர் உள்பட 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு நகைகள்கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்து 3 நாட்களுக்குள்ளாக இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காட்பாடியில் உள்ள கழிஞ்சூர் ஆர்.எம்.எஸ். காலனியைச் சேர்ந்த குமரேசன் என்பவர் பாரத ஸ்டேட்வங்கியில் முதுநிலை கணக்காளராகப் பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி பெயர்பிரேமகுமாரி. இவர்களுக்கு 12 வயதான பிரசாந்த் என்ற ஒரே மகன் மட்டுமே. அவன் 7ம் வகுப்புபடித்து வந்தான்.

வங்கி வேலையாக நேற்று காலை குமரேசன் வீட்டை விட்டுக் கிளம்பிச் சென்றார். இந்நிலையில்பிற்பகலில் யாரோ சிலர் அவர்களுடைய வீட்டுக்குள் புகுந்து பிரேமகுமாரியையும், பிரசாந்த்தையும்கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளனர்.

பின்னர் பிரேமகுமாரியின் கழுத்தில் இருந்த நகைகளை அவர்கள் கொள்ளையடித்தும்சென்றுள்ளனர்.

மாலையில் பக்கத்து வீட்டுக் காரர்கள் சிலர் தற்செயலாக வீட்டுக்குள் சென்று பார்த்தபோதுதான்கொலை நடந்த விவரம் தெரிய வந்துள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு தெரியவில்லை. காட்பாடியில் பட்டப் பகலில்நடைபெற்றுள்ள கொலை, கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 18ம் தேதி இரவுதான் வேலூரில் நகைக் கடை அதிபர் உள்பட 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுநகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்நிலையில் இப்பகுதியில் மற்றொரு கொலை, கொள்ளைச்சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+