For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவில் தேர் இழுத்த புல்டோசர்.. பக்தர்கள் இல்லாததால் பரிதாபம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் தேரை இழுக்க போதுமான பக்தர்கள் இல்லாத காரணத்தால், புல்டோசர் வரவழைக்கப்பட்டு தேர் இழுக்கப்பட்டது.

சென்னை பாரிமுனைப் பகுதியில் கேசவ பெருமாள்கோவில் உள்ளது. இங்கு கடந்த 14 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு பிரம்மோத்சவ விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தேரோட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடந்தது. ஆனால் அதிர்ச்சியூட்டும் விதமாக, தேரை இழுக்க போதுமான பக்தர்கள் வரவில்லை.மிகவும் சொற்ப எண்ணிக்கையில் தான் பக்தர்கள் காணப்பட்டனர். இவர்களை வைத்து தேரை இழுப்பது சாத்தியமில்லை என்பதைஉணர்ந்த கோவில் நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது.

இதையடுத்து புல்டோசர் மூலம் தேரை இழுக்க முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து புல்டோசர் இயந்திரம் வரவழைக்கப்பட்டு தேர்இழுக்கப்பட்டது. ஒருவழியாய் தேரோட்டம் நடந்து முடிந்தது. கோவில் தேரை இழுக்க பக்தர்கள் வராததும், புல்டோசர் வந்து தேரைஇழுத்துச் சென்றதையும் பார்த்து கோவிலுக்கு வந்திருந்த சில பக்தர்களும் மிகுந்த மன வேதனையுற்றனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X