தமிழை செம்மொழியாக அறிவிக்க வாஜ்பாய்க்கு கருணாநிதி கடிதம்
சென்னை:
தமிழ் மொழியை செம்மொழியாக (classical language) அறிவிக்க வேண்டும் என்று கோரி பிரதமர் வாஜ்பாய்க்கு திமுக தலைவர்கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
சமீபகாலமாக இந்தக் கோரிக்கை வலுத்து வருகிறது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முதல்வர் ஜெயலலிதா ஆகியோரும் இதுதொடர்பாக பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். கருணாநிதியும் பலமுறை இந்தக் கோரிக்கையை முன் வைத்தார். இப்போது அவரும்கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடித விவரம்:
தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று பலமுறை கோரி வந்துள்ளேன். குறைந்தபட்சம், தேசிய ஜனநாயகக்கூட்டணியின் ஆட்சிக் காலத்திலாவது எனது கோரிக்கை ஏற்கப்படும் என்று நம்புகிறேன்.
செம்மொழியாக அறிவிக்கப்படுவதற்குத் தேவையான அனைத்து நியாயமான காரணங்களும் தமிழுக்கு உண்டு. மைசூரில் உள்ள இந்தியமொழிகளுக்கான மத்திய கழகம், தமிழை செம்மொழியாக அறிவிக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளதை மனதில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியாவை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஒருவருக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகள் தெரிந்தே இருக்கவேண்டும் என்ற நிலை உள்ளதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications