காவிரி கண்காணிப்பு குழுவை உடனே கூட்ட ஜெயலலிதா கோரிக்கை
சென்னை:
கர்நாடகத்திடம் இருந்து தமிழகத்துக்கு உரிய நீர் கிடைக்கச் செய்ய காவிரி நதி நீர் ஆணையத்தின் கண்காணிப்புக்குழுக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சட்டசபையில் வேளாண்துறை மானியக் கோரிக்கையின்போது இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் பழனிச்சாமிபேசுகையில், வருடா வருடம் ஜூன் 1 ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறைதிறக்கப்படுமா என்ற சந்தேகம் நிலவுகிறத. எனவே இப்போதே தண்ணீரைப் பெறுவதற்கான முயற்சிகளை அரசுமேற்கொள்ள வேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, காவிரிக் கண்காணிப்பு ஆணையக் கூட்டத்தை உடனடியாக கூட்டக்கோரி மத்திய நீர்வளத்துறை செயலாளர் கோஸ்வாமிக்கு, தமிழக தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ்கடிதம் எழுதியுள்ளார். கடந்த 21ம் தேதியே கடிதம் அனுப்பப்பட்டு விட்டது.
தமிழகத்திற்க உரிய நீரைப் பெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள்அச்சப்படத் தேவையில்லை. அவர்கள் தங்களது விவசாயப் பணிகளை உரிய காலத்தில் துவங்கும் வகையில்அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
நீர் குறைவாக இருக்கும் காலத்தில், இருக்கும் நீரை எப்படி இரு மாநிலங்களும் பகிர்ந்து கொள்வது என்பதற்கானபார்முலாவை உடனே வகுக்குமாறு மத்திய அரசிடம் கோரியுள்ளோம் என்றார் ஜெயலலிதா.
-->












Click it and Unblock the Notifications