For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொடைக்கானல் அருகே எரிமலை வெடிப்பு?: மலை பிளந்து பாறைக் குழம்பு ஓடுகிறது

By Staff
Google Oneindia Tamil News

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள மலை பிளந்து, அதிலிருந்து கரும்புகையும், கற்பாறைக்குழம்பும் வெளி வர ஆரம்பித்துள்ளது.

இது எரிமலையாக இருக்குமோ என்று மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

கொடைக்கானல் அருகே, தாண்டிக்குடி பக்கத்தில் உள்ளது தச்சன் கோடை எனப்படும் மலை. இந்த மலை திடீரெனபிளவுபட்டது. அந்தப் பிளவுப் பகுதியிலிருந்து கரும்புகையும், உருகிய, சூடான கற்பாறைக் குழம்பும் வந்துகொண்டுள்ளது.

இந்த குழம்பு சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை ஓடியுள்ளது. அந்த குழம்பு ஓடிய பகுதிகளில் இருந்தசெடிககள், மரங்கள் அனைத்தும் கருகி விட்டன.

கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலையில் ஏற்பட்டுள்ள பிளவு குறித்துசுற்று,வட்டார கிராமங்களில் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

அது எரிமலையாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகள் புவியியல் வல்லுனர்களுக்கும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகளுடனும் அவசரஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X