For Daily Alerts
Just In
மின்சாரம் திருடினால் குண்டர் சட்டம் பாயும்
சென்னை:
தமிழகத்தில் மின் திருட்டி ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதுகுறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
தமிழகத்தில் மெயின் லைன்களில் இருந்து கொக்கி போட்டு மின்சாரம் திருடுவோர் எண்ணிக்கைஅதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மின்துறைக்கு பல கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுவருகிறது.
இதைத் தடுக்க மின் திருட்டி ஈடுபடுவோர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யலாம் என்றுஆலோசித்து வருவதாக மின்துறை அமைச்சர் நயினார் நாகேந்திரன் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து கடந்த இரண்டரை ஆணடுகளில் ரூ. 6.41 கோடிஅபராதம் வசூலிக்கப்பட்ட்டுள்ளது என்றார்.
-->
Comments
Story first published: Thursday, April 24, 2003, 5:30 [IST]