கருணாநிதிக்கு திடீர் உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
கோயம்புத்தூர்:
திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று காலை திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தான் எழுதிய தொல்காப்பியப் பூங்காவின் நூலின் 8வது பதிப்பை வெளியிட அவர் கோயம்புத்தூர் சென்றிருந்தார்.இன்று காலை அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த மேடையிலேயே கருணாநிதிக்கு குறைந்த ரத்த அழுத்தம்காரணமாக லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. உடல் வியர்த்துக் கொட்டியது.
இதையடுத்து அங்கிருந்த கருணாநிதியின் மருத்துவர் சோதித்தார். ரத்த அழுத்தம் மிகக் குறைவாக இருப்பதால்உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர் கூறினார்.
உடனடியாக கார் மூலம் அவர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைபரிசோதித்த மருத்துவர்கள் அங்கேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இப்போது அவர் அங்கேயேஅனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னதாக தொல்காப்பியப் பூங்காவின் 8வது பதிப்பை கவிஞர் வாலி வெளியிட மத்திய அமைச்சர் கண்ணப்பன்பெற்றுக் கொண்டார். பின்னர் ஏற்புரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோதே கருணாநிதிக்கு உடல் நலக் குறைவுஏற்பட்டது. உடனே தனது பேச்சை பாதியில் முடித்துக் கொண்டார்.
கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து நிகழ்ச்சியும் அத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது.இதனால், நிகழ்ச்சிக்கு வந்திருக்க ஆயிரக்கணக்கான திமுகவினரும் பரபரப்படைந்தனர். நூற்றுக்கணக்கானதிமுகவினர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் வெளியே குவிந்துள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications