For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலூர் சகோதரர்களுக்கு சார்ஸ் இல்லை: பரிசோதனையில் முடிவு

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்:

வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 2 சகோதரர்களுக்கும் சாரஸ் நோய்இல்லை என்று அவர்களுக்கு நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

வேலூர் சந்தவாசலைச் சேர்ந்த ஏழுமலை (37) மலேசியாவில் டிரைவராகப் பணியாற்றி வருகிறார். இவர்சமீபத்தில் ஊருக்கு வந்தார். திடீரென்று அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து வேலூர்சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரது சகோதரர் சந்திரனின்உடல்நிலையும் பாதிக்கப்பட்டது.

அவரும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மலேசியாவில் இருந்து திரும்பியதால் ஏழுமலைக்கு சார்ஸ் நோய் இருக்கலாம் என மருத்துவர்கள்கருதினர். மேலும் அவருக்கு கடும் காய்ச்சலும் கொஞ்சம் மூச்சுத் திணறலும் இருந்தால் சார்ஸ்க்கானஅறிகுறிகள் தான் என மருத்துவர்கள் கருதிகினர்.

இதையடுத்து எழுமலையும் சந்திரனும் தனித் தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மருத்துவமனையில் சார்ஸ் ஆய்வுக்கான வசதிகள் ஏதும் இல்லாததால் இவர்களது ரத்த,சளி, சிறுநீர் சாம்பிள்கள் பெங்களூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனைக்கும், புனேவில் உள்ளவைரஸ் ஆராய்ச்சி மையத்துக்கும் அனுப்பப்பட்டன.

இந்த சாம்பிள்களில டத்தப்பட்ட ஆய்வுகளில் இருவரும் சார்ஸ் நோய் இல்லை என்றுதெரியவந்துள்ளதாக மத்திய நலத்துறை இணையமைச்சர் ராஜா நிருபர்களிடம் தெரிவித்தார்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X