கருணாநிதி குணமடைந்தார்: மருத்துவமனையிலிருந்து "டிஸ்சார்ஜ்"
சென்னை:
பொதுக் கூட்ட மேடையிலேயே உடல் நலம் குன்றியதைத் தொடர்ந்து மருத்துவமனையில்சேர்க்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி 3 மணி நேர சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ்செய்யப்பட்டார்.
கோயம்புத்தூரில் நேற்று நடைபெற்ற "தொல்காப்பியப் பூங்கா" நூல் வெளியீட்டு விழாவில்கருணாநிதி கலந்து கொண்டார். அப்போது விழா மேடையிலேயே அவருக்கு திடீரென்றுதலைச்சுற்றலும் மயக்கமும் ஏற்பட்டது.
இதையடுத்து கோயம்புத்தூரில் உள்ள கே.ஜி. மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். தீவிரசிகிச்சைப் பிரிவில் வைத்து அவருக்கு சுமார் 3 மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் உடல் நிலை சீரடைந்தது. உடல் முழுவதும் குணமடைந்த நிலையில் நேற்றுமாலை சுமார் 5 மணிக்கு அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
பின்னர் அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குச் சென்று ஓய்வெடுத்தார்.
இந்நிலையில் இன்று காலை சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு டெலிபோன் செய்த பாமகநிறுவனர் டாக்டர் ராமதாஸ், கருணாநிதியிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார். தற்போது தன் உடல்நிலை பரவாயில்லை என்று ராமதாசிடம் அப்போது தெரிவித்தார் கருணாநிதி.
-->