காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகளைப் பாதுகாப்புப்படையினர் சுட்டுக் கொன்றனர்.
பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள வாட்லாப் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகக்கேள்விப்பட்ட பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து தீவிரவாதிகளும் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையேசுமார் 7 மணி நேரத்திற்கு பயங்கரத் துப்பாக்கச் சண்டை நடந்தது.
இதில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் சில தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர்.இவர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
அப்பகுதியில் தொடர்ந்து தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications