சென்னை போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டார் ஸ்டாலின்
சென்னை:
கடந்த 4 நாட்களாக மதுரையில் தங்கியிருந்து அங்குள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்துப்போட்டு வந்த திமுக இளைஞரணிச் செயலாளர் ஸ்டாலின் இன்று சென்னை-வேளச்சேரி போலீஸ்நிலையத்தில் கையெழுத்துப் போட்டார்.
சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் அத்துமீறி நுழைந்ததாகக் கடந்த 9ம் தேதிநள்ளிரவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு, கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். கைதுசெய்தபோது போலீசாரைக் கொலை செய்ய முயற்சித்ததாகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் கடந்த வாரம் ஸ்டாலினுக்கு சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றம் ஜாமீன்வழங்கியது.
ஆனால் அவர் ஏப்ரல் 26ம் தேதி வரை மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில்தினமும் கையெழுத்துப் போட வேண்டும் என்றும் அதன் பின்னர் சென்னையில் உள்ள வேளச்சேரிபோலீஸ் நிலையத்தில் கையெழுத்துப் போட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து மதுரையில் தங்கியிருந்து நேற்று வரை தினமும் காலை போலீஸ் நிலையத்தில் ஆஜராகிகையெழுத்துப் போட்டு வந்தார் ஸ்டாலின். பின்னர் நேற்று இரவு மதுரையிலிருந்து கிளம்பி இன்றுகாலை சென்னை வந்து சேர்ந்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி இன்று காலை வேளச்சேரி காவல் நிலையத்தில் ஸ்டாலின் ஆஜராகிகையெழுத்துப் போட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், மதுரையில் நானே நாற்காலியை போலீஸ்ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்றேன். இங்கோ அவர்களே நாற்காலி போட்டு உட்காரச்சொன்னார்கள். அது மட்டும்தான் வித்தியாசம். இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்ததுஎன்றார்.
-->












Click it and Unblock the Notifications