வறுமையின் கொடுமை: சென்னையில் குடும்பமே தற்கொலை
சென்னை:
சென்னை அருகே வறுமை காரணமாக ஒரு பெண்ணும் அவருடைய 3 குழந்தைகளும் விஷம்அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அருகே உள்ள அரும்பாக்கத்தைச் சேர்ந்த வையாபுரிஎன்பவர் அப்பள வியாபாரம் செய்து வந்தார். ஆனால் இந்தத் தொழில் சரியாக நடைபெறாதகாரணத்தால் அவர் ஏராளமாக வெளியில் கடன் வாங்கி இருந்தார்.
இதனால் குடும்பத்தை நடத்துவதற்குக் கூட அவரால் இயலவில்லை. இதைத் தொடர்ந்துகுடும்பத்தினருடன் தற்கொலை செய்ய அவர் முடிவு செய்தார்.
இதையடுத்து குளிர் பானம் மற்றும் இனிப்புகளை வாங்கி வந்த வையாபுரி, அதில் விஷத்தைக்கலந்து தன் மனைவி மற்றும் 3 குழந்தைகளுக்குக் கொடுத்தார்.
அவற்றைச் சாப்பிட்ட 3 குழந்தைகளும் சிறிது நேரத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாகஇறந்தனர். வையாபுரியின் மனைவி உயிருக்கு ஆபத்தான் நிலையில் மருத்துமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவரும் உயிரிழந்தார்.
வையாபுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம்குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications