வீரப்பனைப் பிடிக்க மத்தியப் படை தேவையில்லை: டி.ஜி.பி. கோவிந்த்
கன்னியாகுமரி:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்கு மத்தியப் படை தேவையில்லை என்று தமிழகடி.ஜி.பியான கோவிந்த் கூறியுள்ளார்.
தமிழகத்தின் 151 பெண் கமாண்டோக்கள் கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்குத் தொடர் ஓட்டம்மேற்கொண்டுள்ளனர்.
இந்தத் தொடர் ஓட்டத்தை இன்று காலை கோவிந்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர்அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை. மிகவும் சரியாகத்தான்பயன்படுத்தப்பட்டக் கொண்டிருக்கிறது.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள "நக்கீரன்" ஆசிரியர் கோபாலிடம் போலீசார்தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீரப்பனைப் பிடிப்பதற்காக மத்தியப் படையினரை நாங்கள் கோர மாட்டோம். தற்போது அவனைப்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அதிரடிப்படையினரே போதுமானது.
வீரப்பனைப் பிடிக்கும் பணியில் அதிரடிப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
வேலூரில் நகைக் கடை அதிபர் உள்பட 3 பேரைச் சுட்டுக் கொன்று விட்டு நகைகளைக்கொள்ளையடித்து தப்பி ஓடிய கொலையாளிகள் குறித்து முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளன.அவர்கள் வெகு விரைவில் பிடிபடுவார்கள் என்றார் கோவிந்த்.
-->












Click it and Unblock the Notifications