ரூ. 30 கோடி செலவில் சென்னை விமான நிலையம் விரிவாக்கம்: வாஜ்பாய் திறந்து வைக்கிறார்
சென்னை:
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா சர்வதேச விமான நிலையம் ரூ. 30 செலவில்விரிவாக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் பயணிகள் காத்திருக்கும் வளாகம், தங்கும் அறை ஆகியவைவிரிவாக்கப்பட்டுள்ளன. விமான நிலைய வளாகத்தின் முழு புளோரிங்கும் மாற்றப்பட்டுள்ளது.பயணிகளுக்கு பல புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் பெரிய விமானங்கள் இறங்க வசதியாக ரன்-வேயும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த விரிவாக்கப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் வாஜ்பாய் வரும் மே 4ம் தேதி தொடங்கிவைக்கிறார். தனி விமானத்தில் சென்னை வரும் வாஜ்பாயுடன் விமானப் போக்குவரத்துத்துறைஅமைச்சர் ஷானவாஸ் ஹூசேனும் வருகிறார்.
வழியில் பெங்களூரில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாஜ்பாய், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்நிறுவனம் தயாரித்துள்ள லைட் காம்பேட் ஏர்கிராப்ட் (எல்.சி.ஏ.) போர் விமானத்தை நாட்டுக்குஅர்ப்பணிக்கிறார்.
இந்த விமானம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-->