தமிழகத்தில் கோடை சிறப்பு கிரிக்கெட் பயிற்சி முகாம்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கிரிக்கெட், ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுக்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் சிறப்புகோடைக்கால பயிற்சி முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்அறிவித்துள்ளது.

இந்த ஆணையத்தின் செயலாளர் டேவிதார் இன்று இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகப் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கிரிக்கெட் ஆர்வத்தை வளர்க்கும் வகையில்கிரிக்கெட் அகாடமி ஒன்றை முதல் முறையாக சென்னையில் அமைக்க ஆணையம் முடிவுசெய்துள்ளது.

கிரிக்கெட் விளையாட்டின் முன்னேற்றத்திற்கு இந்த அகாடமி ஒரு முன்னோடியாக விளங்கும்.

இதற்காக சென்னை அசோக் நகர்-புதூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.6 லட்சம்செலவில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படவுள்ளது.

மேலும் கால்பந்து, ஹாக்கி, குத்துச் சண்டை, கூடைப் பந்து, வாலிபால், தடகளம் மற்றும் கிரிக்கெட்ஆகிய விளையாட்டுகளுக்கும் சிறப்பு கோடைக்கால பயிற்சி முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இந்தச் சிறப்புப் பயிற்சி முகாம்கள் நடைபெறுகின்றன.இதற்காக ரூ.100 கட்டணம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 3 வார காலத்திற்கு இந்தப் பயிற்சிமுகாம் நடக்கும் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இன்று சென்னையில் கோடைக் கால சிறப்பு பயிற்சி முகாம்கள் தொடங்கிவைக்கப்பட்டன. கல்வி அமைச்சர் செம்மலை, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்துணைத் தலைவரும் முன்னாள் டி.ஜி.பியுமான தேவாரம் ஆகியோர் தொடக்க விழாவில் கலந்துகொண்டனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+