ராமநாதபுரம் அருகே "மார்பின்" போதைப் பொருள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே ரூ.15,850 மதிப்புள்ள "மார்பின்" என்ற போதைப் பொருள் பறிமுதல்செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் என்ற கிராமத்தில் போதைப் பொருள் நடமாட்டம்இருப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்தக் கிராமத்திற்குள் திடீரெனப் புகுந்த தனிப் படைப் போலீசார் அங்குள்ளவீடுகளில் அதிரடிச் சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு வீட்டில் இருந்த 550 கிராம் "மார்பின்" போதைப் பொருளைப் போலீசார்கைப்பற்றினர். அதை வைத்திருந்த 32 வயது மதிக்கத்தக்க ஒருவரையும் அவர்கள் கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு ரூ.15,850 எனத் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications