டெல்லி விமான நிலையத்தில் பெர்னாண்டசுக்கு சார்ஸ் சோதனை
டெல்லி:
சீனாவில் இருந்து டெல்லி திரும்பிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு சார்ஸ்பரிசோதனை செய்யப்பட்டது.
கடந்த ஒரு வாரமாக சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பெர்னாண்டஸ் இன்று காலை டெல்லிதிரும்பினார்.
சார்ஸ் நோய் தோன்றியதாகக் கருதப்படும் சீனாவிலிருந்து பெர்னாண்டஸ் நாடு திரும்புவதால்அவருக்கும் சார்ஸ் நோய் பரிசோதனை செய்யப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசுஅறிவித்திருந்தது.
அதன்படி டெல்லி வந்து சேர்ந்த பெர்னாண்டசுக்கு விமான நிலையத்தில் இன்று சார்ஸ் பரிசோதனைசெய்யப்பட்டது. சார்ஸ் நோய்க் கிருமிகள் அவரைத் தாக்கியிருக்கவில்லை என்று அப்போது தெரியவந்தது.
இதையடுத்தே அவர் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டார்.
வெளியே வந்த பெர்னாண்டஸ் நிருபர்களிடம் கூறுகையில், சீனாவிலிருந்து நான் கிளம்பும்போதேஎனக்கு சார்ஸ் நோய் இருக்கிறதா என்று சோதனை செய்தார்கள். இப்போது மீண்டும் செய்துள்ளனர்என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
-->